districts

img

மாணவர்களே வடிவமைத்து முதல் முறையாக பள்ளியில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்

மயிலாடுதுறை, பிப்.6 -  இந்தியாவிலேயே முதன் முறையாக சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி யில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர்.

 தற்போது இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களே உரு வாக்கிய சிறிய அளவிலான செயற்கைக் கோளை, பள்ளியிலிருந்து விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். சுமார் 1.63 கிலோ எடை கொண்ட இந்த சிறிய ரக செயற்கைக்கோளை, பூமியில் இருந்து ஒரு லட்சம் அடி உயரத்திற்கு ஹீலியம் பலூன் உதவியுடன் அனுப்பி, அங்குள்ள தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து தகவலை அனுப்பும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியும், சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகளும், ஓப்பன் ஸ்பேஸ் பவுண் டேசனுடன் இணைந்து உருவாக்கி அனு ப்பியுள்ளனர்.

இந்த செயற்கைக்கோளா னது விண்ணில் தொடர்ந்து 3 முதல் 8 மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டு  தகவல்களை திரட்டும் என கூறப்பட்டுள்ளது.  இது, இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டு, பள்ளியில் இருந்து செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் இருந்து செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வு, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனை வரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிகழ்வில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.